குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா உறுதியானதை அடுத்து 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குடியிருப்புகளில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தபட்டதையடுத்து 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.